
Wednesday, December 28, 2011

Sunday, December 18, 2011
ஈமானியப் பலஹீனத்தின் வெளிப்பாடுகள்
அளவில்லா கருணையும் இணை இல்லா கிருபையும் உடைய அல்லாஹ் வின் திரு பெயரால் ஆரம்பம் செய்கின்றேன், எல்லாப் புகழும் அல்லாஹுவுக்கே உரித்தானவை, இன்னும் ரசூலே கரீம் சல்லல்லாஹு அலைஹிவசலம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும், இன்னும் அவர்களைப் பின்பற்றிய அனைவர் மீதும் உண்டாவதாக, ஆமீன் என்று கூறி என்னுடைய சிறிய தொகுப்பை தருகிறேன், இன்ஷா அல்லாஹ்…
முதலில் நம்முடைய ஈமானின் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..
தொழுகையிலும் சரி, அல்லாஹ்வின் திருமறையை ஓதுவதிலும் சரி, சஹாபாக்கள் உணர்ந்த சுவையையும் லயிப்பையும் நாம் எப்போதாவது உணர்ந்த்திருக்கின்றோமா? நம்மில் மிக குறைவானவர்கள் சில நேரத்தில் உணர்ந்திருக்கலாம். ஆனால், இதுபோன்ற கதைகளைக் கேட்டுப் பூரித்துப் போனதைத் தவிர வேறெதையும் காணாதவர்கள் தான் அதிகம்
நாம் தொழுகின்றோம், நோன்பு நோற்கின்றோம், தானம் செய்கின்றோம், ஹஜ் செல்கின்றோம் , சஹாபாக்கள் செய்த எல்லா இபாதத்களிலும் ஈடுபடுகின்றோம். ஆனால், அவர்களது இபாதத்துகளில் காணப்பட்ட ஈரத்தை, பசுமையை நாம் காண்பதில்லை.
நாம் குடும்ப வாழ்கை மேற்கொள்கிறோம். கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றோம். சமூக உறவுகளில் ஈடுபடுகின்றோம். ஆனால், இவற்றை செயல்படுத்துகின்ற போது சஹாபாகளில் காணப்பட்ட அழகையும் நேர்மையையும் நம்மிடம் காண முடியவில்லை.
இப்னு மசூத்(ரலி) அவர்கள் தனது மாணவர்களைப் பார்த்துள் கூறினார்: சஹாபாக்களை விடவும் நீங்கள் அதிகமாக தொழுகையில் ஈடுபடுகின்றீர்கள், நோன்பு நோர்கின்றீர்கள், ஆனால் அவர்கள் உங்களை விட சிறந்து காணப்பட்டார்கள். காரணத்தை வினவியபோது, அவர்கள் உங்களை விடவும் உலகில் பற்றற்றவர்களாக இருந்தார்கள். உங்களை விடவும் மறுமையில் ஆசை வைத்தவர்களாக இருந்தார்கள் என்றார்கள்.
அபூ பக்கர்(ரலி) அவர்களைப் பற்றி சில சலபுகள் கூறுகின்றபொழுது, அபூ பக்கர்(ரலி) அவர்கள் அதிகமாக தொழுகையாலும் நோன்பாலும் எங்களை மிகைக்கவில்லை. மாறாக அவரது உள்ளத்தில் ஆழப் பதிந்த ஈமானால்தான் எங்களை மிகைதிருந்தார் என்றனர்.
எனவே புறச் செயல்களில் பெரிய வேறுபாடு காணப்படாவிட்டாலும் அகச் செயல்களில் வேறுபாடு இருந்திருக்கிறது. அவர்கள் இபாதத்தையும் சரி குடும்ப வாழ்கையையும் சரி சமூக வாழ்கையையும் வியாபாரத்திலும் சரி சுவைத்துச் செய்துருக்கிரார்கள். அதில் அழகும் நேர்மையும் பிரதிபலித்திருகிறது….
சகோதரர்களே இங்கே நம்முடைய நிலையை அலசி பார்க்க வேண்டும்…
ஈமானியப் பலஹீனத்தின் வெளிப்பாடுகள் சில
ஒருவனது செயல்களை வைத்து அவனது ஈமானின் பலம் பலஹீனம் பற்றி அளவிட முடியும். ஈமான் பலஹீனமடையும் போது, அதன் வளிப்பாடுகள் எவ்வாறு இருக்க முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்…
இபாதத்களை அதற்குரிய வடிவில் நிறைவேற்றுவதில் கவனக் குறைவாக இருப்பார். ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாகியே வருவார் அல்லது ஜமாஅத்திற்கு வரவே மாட்டார். சில சமயம் பள்ளிவாசலுக்கு வரமாட்டார். தொழுகைகளிலும் பல எண்ணங்களுடனேயே இருப்பார். இமாம் ஸலாம் கொடுத்தவுடன் தான் சுய நினைவுக்கு வருவார்.
சுபஹ் தொழுகைக்கு உரிய நேரத்தில் எழ மாட்டார். சூரியன் உதித்த பின் எழுந்து கொண்டாலும் அதற்காக கொஞ்சமும் கவலைப்படாமல் சாதாரணமாகவே தனது கடமைகளைச் செய்து கொண்டிருப்பார்..
ஜும்ஆத் தொழுகைக்கு இமாம் மிம்பரில் ஏறிய பிறகே போவார். அல்லது தொழுகைக்காக தக்பீர் கட்டும் நேரத்தில் அவசரமாகப் போய் இணைந்து கொள்வார். நேர காலத்துடன் போனாலும் குத்பாவைக் கேட்பதை விட்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார்..
சுன்னத்தான அமல்களில் ஈடுபாடு காட்ட மாட்டார். அவற்றை விடுவது குற்றமில்லை என இருந்துவிடுவார். கியாமுல் லைல், ழுஹா போன்ற தொழுகையையோ, சுன்னத்தான ஒரு நோன்பு நோர்பதையோ காணவே முடியாதிருக்கும்..
அல்லாஹ்வின் திருமறை ஓதுவதைக் காணமுடியாதிருக்கும். அப்படியே ஓதினாலும் நாவால் மட்டும் தான் உள்ளத்தில் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. சந்தர்ப்ப துஆக்கள் ஒதுபவராக அவரைக் காணமுடியாது. அல்லாஹ் விடத்தில் கையேந்தி துஆக் கேட்கும் பண்பு இருக்காது.
ஈமான் பலஹீனப்படும்போது இவற்றையும் இன்னும் பலவற்றையும் காணலாம். தனிமனிதன் , சமூகம், அரசு எல்லாவற்றிலும் இதன் பாதிப்புகள் இருக்கும். தனிமனிதனோ, சமூகமோ, அரசோ வீழ்வதற்கு இதுவே காரணமாக இருக்கும்.
புகழ் அனைத்தும் அல்லாஹுவுக்கு உரியது, பிழைகள் எதுவும் இருந்தால் அல்லாஹ் என்னை மன்னிபானாக என்று தொகுத்து என்னுடைய இந்த தொகுப்பை நிறைவு செய்கிறேன்..
நன்றி அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் சமத் (நளீமி)
Sunday, December 11, 2011
மறுமை (உலக அழிவு) நாளின் அடையாளங்கள்
நிச்சயமாக என்றொரு நாலாவது இவ்வுலகம் அழியப்போவது நாம் யாவரும் அறிந்த ஒரு விடயம். ஆனால் அதனைப்பற்றி நாம் சிந்திப்பது இல்லை. நாம் வாழும் காலம்வரை நன்மை செய்து வாழ வேண்டும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஆதாரங்களை பார்ப்போம்:-
மகளின் தயவில் தாய்
நூல்: புகாரி 4777, 50
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
நூல்: புகாரி 4777
நூல் : புகாரி 7121
விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
நூல் : புகாரி 59, 6496
பாலை வனம் சோலை வனமாகும்
நூல் : முஸ்லிம் 1681
காலம் சுருங்குதல்
நூல் : திர்மிதீ 2254)
கொலைகள் பெருகுதல்
நூல் : புகாரி 85, 1036, 6037, 7061
நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
நூல்: புகாரி 1036, 7121
பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
நெருக்கமான கடை வீதிகள்
நூல்: அஹ்மத் 10306
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808
ஆடை அணிந்தும் நிர்வாணம்
நூல் : முஸ்லிம் 3971, 5098
உயிரற்ற பொருட்கள் பேசுவது
நூல்: அஹ்மத் 11365
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
நூல்: அஹ்மத் 1511
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
நூல்: ஹாகிம் 4/493
பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
நூல்: ஹாகிம் 4/493
சாவதற்கு ஆசைப்படுதல்
நூல்: புகாரி 7115, 7121
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
நூல்: புகாரி 3456, 7319
யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
நூல்: புகாரி 2926
கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
நூல் : புகாரி 5179
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
நூல் : புகாரி 7119
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
நூல் : புகாரி 3517, 7117
அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
நூல் : முஸ்லிம் 5183
எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
நூல் : முஸ்லிம் 5191
செல்வம் பெருகும்
மாபெரும் யுத்தம்
பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
நூல் : புகாரி 3176
மதீனா தூய்மையடைதல்
நூல் : முஸ்லிம் 2451
அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
நூல் : முஸ்லிம் 3546
மாபெரும் பத்து அடையாளங்கள்
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 – (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.
புகை மூட்டம்
(அல்குர்ஆன் 44:10,11)
நூல்: தப்ரானி
ஈஸா(அலை) அவர்களின் வருகை
மூன்று பூகம்பங்கள்
பெரு நெருப்பு
Thursday, December 8, 2011
Tuesday, December 6, 2011

தாஸூஆவில் ஓர் அஸ்தமனம்.
‘கீரனூரி’ என்ற பெயரை அறியாத தமிழ் பேசும் முஸ்லிம்கள் யாரும் இருக்க மாட்டார்கள். என்று சொன்னால் அது மிகையாகாது.
தென்னிந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கீரனூர் எனும் ஊரில் 13-06-1944 (ஹிஜ்ரி 1363 ஜமாதுல் ஆகிர் பிறை 20) செவ்வாய்க் கிழமை செல்வச் செழிப்போடு வாழ்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் லதீப் அவர்களின் மகனாக ஹழ்ரத் அவர்கள் பிறந்தார்கள்.
67 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்து 16-12-2010 (ஹிஜ்ரி 1432 முஹர்ரம் பிறை 09) வியாழக் கிழமை மறைந்த அறிவுச் சூரியன் கலீல் அஹ்மத் கீரனூரி ஹழ்ரத் அவர்கள் சமுதாயத்திற் விட்டுச் சென்ற படிப்பினைகள் ஏராளம். அவர்கள் தமது வாழ்வின் அந்திம காலத்தில் எழுதி 2009 ஆகஸ்டில் வெளியிட்ட “நினைவுகள்” என்ற நூலைப் படித்தவர்கள் அவர்களைப் பற்றி நன்றாகவே புரிந்திருப்பார்கள்.
தஃவத்துடைய உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தந்தையின் கண்டிப்பும் தாயின் பாசமும் கலந்த ஒரு நல்ல குடும்பச் சூழலில் வளர்க்கப்பட்ட ஹழ்ரத் அவர்கள் 7 வயதிலேயே குர்ஆனை முழுமையாக ஓதி முடித்தார்கள்.
1956 ஆம் ஆண்டு இறுதியில் தனது 12 வது வயதில் லால்பேட்டை மன்பஉல் அன்வார் அறபுக் கல்லூரியில் சேர்ந்து ஏழாண்டுகள் அங்கு கல்வி பயின்றார்கள். அதன் பிறகு பெங்கழூரிலுள்ள ஸபீலுர் றஷாத் அறபுக் கல்லூரியில் உர்து மற்று பார்ஸீ மொழிகளைக் கற்றார்கள். 1964 ஆம் ஆண்டு தாருல் உலூம் தேவ்பந்தில் ஹதீஸ் கலையைக் கற்றுக் கொண்டிருக்கும் போதே திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
திருச்சியில் எட்டு வருடங்கள் உஸ்தாதாகப் பணிபுரிந்தர்கள். இந்தக் காலப் பகுதியில்தான் அவர்களுடைய திருமணமும் நடந்தது. 5 குழந்தைகள் (மூன்று ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும்) திருச்சியைத் தொடர்ந்து ஆறு வருடங்கள் ஈரோடு தாவூதிய்யா அறபுக் கல்லூரியில் தீன்பணி செய்தார்கள்.
05-09-1979ல் பலரின் வேண்டுகோளுக்கிணங்க தாருல் உலூம் யூசுபிய்யாவில் காலடி எடுத்து வைத்தார்கள். அன்று முதல் மௌத்துவரை மொத்தம் 31 வருடங்கள் அங்கேயே அதிபராகப் பணியாற்றினார்கள். யூசுபிய்யா ஹழ்ரத் அவர்களின் கனவுக் கோட்டை. யூசுபிய்யா வளர தன்னையே உரமாக்கினார்கள். ஒரு சிறிய அறைக்குள் இருந்து கொண்டு முழு உலகையும் பற்றி சிந்தித்தார்கள். மத்ரசாவின் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தர்கள். முதாலஆவுக்காக (சுயமாகக் கற்றல்) மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தமை, நாளை நடக்க இருக்கும் பாடத்தை இன்றே மாணவர்கள் சுயமாக முடிந்த வரை படித்து விளங்கிக் கொண்டு மறு நாள் பாடத்தில் தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்வது என்ற ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியமை போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.
‘நான் பெற்ற பிள்ளைகள் எனது உடலணுக்கள் என்றால் என்னுடைய மாணவர்கள் எனது உயிரணுக்கள்’ என்று சொல்வார்கள். உண்மையில் அப்படித்தான் நடக்கவும் செய்தார்கள். ஒரு குழந்தையின் மீது தகப்பனுக்கு இருக்க வேண்டிய கண்டிப்பும் பாசமும்தான் அவர்களிடம் மிகைத்துக் காணப்பட்டது. அவர்களைப் பார்த்து மாணவர்கள் பயப்பட்டார்கள் என்று சொல்வது கடினம். மாறாக அவர்களைப் பற்றிய மரியாதை கலந்த ஓர் அச்ச உணர்வு மாணவர்களுடைய உள்ளங்களில் எப்போதும் இருந்தது எனலாம்.
அவர்கள் மாணவர்களுக்குச் சொன்ன புத்திமதிகள் முழு உலகுக்கும் உள்ள புத்திமதிகளே. 200க்கும் மேற்பட்ட பயான்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கேள்வி. ‘விரல்களுக்கு ஈட்டியின் வலிமையுண்டு காது குடைந்து சுகம்காண முயற்சிக்காதீர்கள் சந்திரனைப் பிளக்க முயற்சியுங்கள்’ என்பார்கள். ‘இறப்பு எழுதியவனுக்குத் தான் எழுத்துக்கல்ல ஆகவே பேனாவின் கழுத்து சுளுக்கும் வரை எழுதுங்கள்’ என்றார்கள். ‘முதல் நபராக நுழைய வேண்டும் கடைசி நபராக வெயியேற வேண்டும் பள்ளிவாசலுக்கு மட்டுமல்ல நூலகத்துக்கும்தான்’ என்றார்கள். ‘மாணவர்களே! நீங்கள் நிமிர வேண்டும் கேள்விக்குறியின் முதுகில் மிதித்து அதை ஆச்சரியக் குறியாக நிமிர்த்த வேண்டும்’ என்பார்கள். இது போன்ற சிதறிய முத்துக்கள் ஏராளம். தென்னிந்திய அறிஞர்கள் ஹழ்ரத் அவர்களை “சிந்தனைச் சுடர்” என்று மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
ஹழ்ரத் அவர்கள் தீனுக்குச் செய்த சேவைகள் ஏராளம். அனைத்தையும் எழுத முடியாவிட்டாலும் ஒரு சிலதை எழுதித்தான் ஆக வேண்டும். விண்ணியல் அல்லது வானவியல் என்று சொல்லப்படும் கலையில் ஹழ்ரத் அவர்களுக்கு போதிய அறிவும் தேர்ச்சியும் இருந்தது. பொதுவாகவே அவர்கள் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய தகுதியும் தைரியமும் உள்ளவர்களாக ஆலிம்கள் உருவாக வேண்டுமென்று சிந்தித்தவர்கள். இந்த விண்ணியற்கலை சம்பந்தமாக அறபு மத்ரசாக்களில் போதிக்கப்பட்டு வந்த கிதாப்கள் சுமார் எழுநூறு வருடங்கு முன்பு எழுதப்பட்டவை. குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் ஒத்துப் போகக்கூடிய நவீன விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் இத்துறையில் சில கிதாப்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவை மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடிய அமைப்பில் இருக்கவில்லை. எனவே மிக நீண்ட ஆய்வுக்குப் பின்னால் “அல் அப்லாக் வல் அவ்காத்” என்ற கிதாபை எழுதினார்கள்.
‘வானியல் தொடர்பான விஞ்ஞான உண்மைகள் - உண்மையிலேயே உண்மையாக இருந்தால் - அவை குர்ஆனுக்கு எவ்வகையிலும் முரண்படாது’ என்ற கருத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த கிதாபில் விளக்கியிருக்கிறார்கள். இதில் வானவியல் புவியியல் தொழுகை நேரங்களை அறிந்து கொள்ளும் முறை கிப்லாவை அறிந்து கொள்ளும் முறை இரவு பகல் மாற்றங்கள் பற்றியெல்லாம் ஹழ்ரத் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். 1990 களிலிருந்து இதன் கையெழுத்துப் பிரதியை வைத்தே ஹழ்ரத் அவர்கள் பாடம் நடத்தினார்கள். 2000 இல் அது அச்சு வடிவம் பெற்றது. ஹழ்ரத் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே தமிழ்நாடு கேரளா இலங்கை ஆகிய இடங்களிலுள்ள அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் இக்கிதாபு சேர்க்கப்பட்டு விட்டது. இன்று லெபனானில் அச்சாகி அறபு நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அறபியல்லாத ஒருவர் இப்படி ஒரு கிதாபை எழுதியிருப்பதை லெபனான் பதிப்பகத்தார்களே புகழ்ந்திருக்கிறார்கள்.
2001-05-13-15 ஆகிய தினங்களில் அக்குரணை ஜாமிஆ றஹ்மானிய்யாவில் அல் அப்லாக் வல் அவ்காத் கிதாபை பாடம் நடத்தினார்கள். அதில் 250 ஆலிம்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அதற்குப் பிறகு இலங்கையிலிருந்து 15 ஆலிம்கள் யூசுபிய்யா மத்ரஸாவிற்குச் சென்று ஏறத்தாழ பத்து நாட்கள் அங்கு தங்கியிருந்து வானவியல் சம்தமாக ஹழ்ரத் அவர்களிடம் கற்றுக் கொண்டு அதற்கான சான்றிதழ்களையும் பெற்று நாடு திரும்பினார்கள். இதற்கு முன்பு தமிழக ஆலிம்களுக்கும் யூசுபிய்யா மத்ரஸாவில் வானவியல் சம்பந்தமான ஒரு கருத்தரங்கு நடத்தினார்கள். அதில் மூன்று நாட்கள் அல் அப்லாக் வல் அவ்காத் கிதாபை பாடம் நடத்தினர்கள். அதன் மூலம் நிறைய ஆலிம்கள் பயன்பெற்றனர்.
மன்திக் (தர்க்கவியல் கலை) என்றாலே பலருக்கு ஒவ்வாமை. சிலர் அப்படி ஒரு கலை தேவையில்லை என்றும் சொல்வதுண்டு. ஹழ்ரத் அவர்கள் அந்தத்துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அது சம்பந்தமாக அவர்கள் “அல்கிஸ்தாஸ்“ “அல்பலாகா“ என்று இரண்டு கிதாப்கள் எழுதியிருக்கிறர்கள். அதன் கையெழுத்துப் பிரதிகள் சில மத்ரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படுகின்றன. அத்தோடு வாரிசுரிமை சம்பந்தமாகவும் “அல் பறாயில்“ என்றொரு கிதாபையும் எழுதியிருக்கிறர்கள் அது யூசுபிய்யாவில் ஓதிக்கொடுக்கப்படுகிறது. இன்ஷா அழ்ழாஹ் இவை வெகு விரைவில் அச்சாகி வரும்.
தஃவத்துடைய உழைப்பில் தன்னை முழமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரியவேண்டுமென்பதில்லை. உலகில் அதிகமான நாடுகளுக்கு ஜமாஅத்தில் சென்றிருக்கிறார்கள். டில்லி மர்கஸோடும் அங்கிருந்த இருக்கிற ஆலிம்களோடும் மிக நெருக்கமான தொடர்பு இருந்தது. தப்லீக் இஜ்திமாக்களிலும் ஜோடுகளிலும் பெரியார்களின் பயான்களை தமிழில் மிக அழகாக மொழி பெயர்த்த பெருமை அவர்களுக்கிருக்கிறது. 1970 களிலிருந்து பல தடவைகள் இலங்கைக்கு வந்து போயிருக்கிறார்கள். இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் பட்டமளிப்பு விழாக்களில் கலந்து பட்டம் பெற்று வெளியாகும் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நிறையவே புத்திமதிகள் சொல்லியிருக்கிறார்கள். போலித் தவ்ஹீத்வாதத்துக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்தவர்கள். அவர்களிடம் கல்வி கற்ற இலங்கை மாணவர்கள் கிட்டத்தட்ட 40 பேருக்குக் குறையாமல் இருக்கிறார்கள். அழ்ழாஹ்வுடைய கிருபையினால் எல்லோரும் ஹழ்ரத் அவர்களின் துஆவின் பறக்கத்தால் ஏதோ ஒரு வகையில் தீனுக்கு தங்களாலான சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரும் வீண் போகவில்லை. “அல் அப்லாக் வல் அவ்காத்“ கையெழுத்துப் பிரதிகூட இலங்கை மாணவர்களால் எழுதப்பட்டதுதான்.
வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் “கனவுகள்” என்றொரு நூலை எழுதிக்கொண்டிருந்தார்கள். அது அவர்களின் உளக்கனவுகளை சுமந்து வந்த ஒரு நூல். முழுக்க முழுக்க ஆலிம்களுக்கும் மத்ரஸா நிர்வாகிகளுக்கும் மாணவர்களுக்குமான புத்திமதிகளும் வழிகாட்டல்களும் அடங்கிய மிகச்சிறந்த ஒரு நூல். துரதிஷ்டவசமாக அது எழுதி முடிய முன்பு ஹழ்ரத் அவர்களின் வாழ்வு முடிந்து போனது. அது இப்போது அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கிறது.
யூசுபிய்யா மத்ரஸாவில் எப்போதும் பட்டமளிப்பு விழாவுக்கு மக்கள் திரளாக வருவார்கள். 16-12-2010 ஹிஜ்ரி 1432 முஹர்ரம் பிறை 09 மாலை சூரியன் மறைந்ததிலிருந்து மக்கள் கூட்டங்கூட்டமாக மத்ரஸாவை நோக்கி வர ஆரம்பித்தார்கள். ஆம் மறைந்த சூரியனைப் பார்க்க வந்தார்கள். யூசுபிய்யாவில் பட்டம் கொடுத்தவர் ‘ஜனாஸா’ என்ற பட்டத்தோடு படுத்திருக்கிறார் அதைப் பார்க்க வந்தார்கள். பல வருடங்களாக ஹழ்ரத் அவர்கள் எதிர்பார்த்திருந்த மரணம் இப்போது வந்திருக்கிற. 2001ம் ஆண்டு அவர்கள் பேசிய ஒரு பயானில் ‘இன்னும் பத்து வருடங்களில் யார் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். 2010 டிசம்பரில் நான் இறந்து விட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்?’ என்று பேசினார்கள். கேட்டது போலவே 2010 டிசம்பர் 16ம் திகதி தாஸூஆ நோன்பு மத்ரஸாவில் நோற்றார்கள். நோன்பு துறக்க அல்லாஹ்விடம் சென்று விட்டார்கள்.
இறுதியாக 05-08-2010ல் இலங்கைக்கு வந்துவிட்டுத் திரும்பிச் செல்லும் போது கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பியது இன்று போல் ஞாபகத்தில் இருக்கிறது. அப்போது அவர்கள் ‘இதற்குப் பிறகு இலங்கைக்கு வரமாட்டேன் என்று நினைக்கிறேன் இது எனது இலங்கைக்கான இறுதிப் பயணம்’ என்றார்கள். (ஹஸ்ரத் அவர்களை கட்டியணைத்தபடியே இல்லை நீங்கள் மீண்டும் இங்கு வருவீர்கள் என்றேன். இல்லை நான் வரமாட்டேன் என்று உறுதியாகவே சொன்னார்கள் சொன்னது போல் மீண்டும் வரவேயில்லை) 14-12-2010ம் திகதி ஹழ்ரத் அவர்களுக்கு பணிவிடை செய்யும் ஒரு மாணவன் விடுமுறை கேட்டிருக்கிறார் அவனிடம் ‘எப்போது வருவாய்?’ என்று கேட்டதற்து அவர் வியாழக்கிழமை என்று பதில் சொல்லி இருக்கிறார். ‘அப்படியானால் வெள்ளிக் கிழமை குளிப்பாட்ட வருவாய்’ என்று சொல்லியிருக்கிறார்கள். 16-12-2010ம் திகதி வியாழக் கிழமை அதிகாலை நாற்காலியில் அமர்ந்துகொண்டு தஹஜ்ஜுத் தொழுதிருக்கிறார்கள். பலர் தடுத்தும் நோன்பு வைத்திருக்கிறார்கள். வழமைபோல் காலையில் பாடம் நடத்தி இருக்கிறார்கள். மிஷ்காத் பாடத்தில் தொழுகை பற்றிய ஹதீஸை நடத்தும் போது ‘ஒவ்வொரு தொழுகையையும் வாழ்க்கையின் கடைசித் தொழுகை என்று நிதை்துத் தொழவேண்டும்’ என்று கூறிவிட்டு என்னைப் பார்க்கும் போது ‘இதுதான் கடைசித் தடவை பார்க்கிறேன் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்’ என்று கூறியபோது மாணவர்கள் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். உடனே ‘நாளை நான் இருப்பேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்’ என்று கேட்டிருக்கிறார்கள். மாலை 4.30 மணிக்கு ‘இப்தார் நேரம் வந்து விட்டதா?’ என்று கேட்டிருக்கிறார்கள். 4.50 மணிக்கு ஒரு மாணவனிடம் தனது ஆடைகளை துவைக்கக் கொடுத்து விட்டு தேவையில்லை என்று திருப்பி வாங்கி இருக்கிறார்கள். நான் ‘மக்ரிபிற்கு எழுந்திருக்கா விட்டால் எழுப்பி விடு’ என்று குறிவிட்டு உறங்கியவர்கள் எழுந்திருக்கவே இல்லை. எழுப்பிவிட வந்த மாணவன் வெள்ளைத்துணியால் முழமையாகப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த ஒரு ஜனாஸாவையே பார்த்தான்.
ஒரு உளியின் 67 வருடப் பயணம் நிறைவு பெற்றது.
நினைவுகளின் கடைசிப் பக்கத்தில் “13.06.2009ல் 65 வயது பூர்த்தியாக விட்டது. பன்னிரெண்டாம் வயது முதல் قَالَ اللهُ قَالَ رَسُوْلُ اللهِ (அழ்ழாஹ் சொன்னான் - அவனது தூதர் சொன்னார்கள்) என்று சொல்லாத நாட்கள் அநேகமாக இல்லை. அது ஒன்று மட்டுமே மனதுக்கு நிiறுவு தருகிற அம்சம் என்பது தவிர வேறொன்றும் தெரியவில்லை. நடந்த நல்லவைகளெல்லாம் நிஜ நன்மைகளாக மீஸான் தராசுக்கு வர வேண்டும். கேள்வி கணக்கின் போது நல்ல சாட்சிகளாக வேண்டும். ஸிறாதுல் முஸ்தகீமை மின்னலாகக் கடக்க வைத்து اُدْخُلُوْهَا بِسَلاَمٍ آمِنِيْن ''சாந்தியுடனும் அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்" (அல்குர்ஆன் 15: 46) என்று சொல்லப்படும் கூட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற உண்மை ஆசை நிறைவேற துஆவின் கோரிக்கையோடு முடிக்கிறேன். அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வறஸூலுஹூ” என்று புத்தகத்தை முடித்திருக்கிறார்கள். வெள்ளிக் கிழமை பகல் அன்னாரது ஜனாஸா கீரனூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹ் அவர்களது ஆகிறத்து வாழ்வை எல்லா வகையிலும் செழிப்பாக்கி வைப்பானாக! ஆமீன்.

